நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மதுரையில் நீட் பயிற்சிக்கு செல்லாத 60

ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது

*பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக சனி, ஞாயிறு அன்று 15 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்

*இவர்களுக்கு பாடம் வாரியாக ஒரு மையத்தில் தலா 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது

*இதற்காக ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்ஒதுக்கீடு செய்யசி.இ.ஓ., கோபிதாஸ் உத்தரவிட்டார்

*செப்., 24 - 28 வரை நடந்த பயிற்சிக்கு 60 ஆசிரியர்கள் வரவில்லை

*ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ கோபிதாஸ்நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

0 comments:

Post a Comment