டிசம்பருக்குள் 672 பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில்

நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment