இயற்கைப் பேரிடர் காலங்களில் மனித ஆக்கப் பேரிடர்களைத் தவிர்ப்போம்!

இயற்கைப் பேரிடர் காலங்களில் மனித ஆக்கப்பேரிடர்களைத்தவிர்ப்போம்!

முனைவர்மணி.கணேசன்

அண்மைக்காலமாக ஆண்டின்இறுதிப்பகுதியில் தென்மேற்குமற்றும்  வடகிழக்குப்  பருவமழைக் காரணமாக காற்றழுத்தத்  தாழ்வுப்பகுதி  புயலாக  உருவெடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையினைச் சீர்குலைப்பதுவாடிக்கையாக உள்ளது. சற்றுப்பெய்யும் கனமழைக்கு ஊரேவெள்ளக் காடாகக் காட்சியளிக்கும்கொடுமையினை என்னவென்பது?மாமழையைப் போற்றுவதும்பெருக்கெடுத்தோடும் வெள்ளப்பெருக்கை வரவேற்பதும்கொண்டாடிக் களிப்பதும் தமிழ்ச்சமூகத்தின் பெருவழக்காக இருந்துவந்துள்ளது.

இன்று இத்தகைய சூழல்மாறிவரும் போக்குகள் மலிந்துகாணப்படுகின்றன. மழையைவெறுத்தொதுக்கும் மனநிலையில்மனிதர்கள் இருக்கின்றனர் என்பதுமிகையில்லை. மழைநீர்ப்பெருக்கை அச்சம் மேலோங்கஅணுகும் வாழ்வியல் சூழல்தான்இங்குள்ளது. ஆறுகளிலும்ஏரிகளிலும் குளங்களிலும்குட்டைகளிலும் நீந்திக் குளிக்கும்நடைமுறைகள் தற்காலத்தில்ஒழிந்துவிட்டன.வாய்ப்புள்ளவர்கள்கூடகுழாய்களிலும் தேக்கிவைக்கப்பட்டபாத்திரங்களின் மூலம் பகுதித்திறந்தவெளிகளிலும் அவசரக்குளியல் மேற்கொள்வதையேவழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆழ்குழாய் நீரும் காசுகொடுத்துப் பெறும் குடிநீர்புட்டிகளும் மனித வாழ்க்கைக்குரியநீர்த் தேவைகளையும்பயன்பாடுகளையும் நிறைவுசெய்திடுமென்று முழுதாக நம்பிடும்அவலநிலையே உள்ளது.

அரசு நிர்வாகத்தின் நீர்மேலாண்மைக் குறித்தஅக்கறையின்மையும் அலட்சியப்போக்குகளும் நீர்வழித் தடத்தையும்ஆதார சேமிப்பு இடங்களையும்தனிமனித ஆக்கிரமிப்புநடவடிக்கைகளிலிருந்துபாதுகாக்கத் தவறிவிட்டன. இதன்காரணமாகக் கொட்டிய  மழைநீர்உரிய வழிகளில் சேகரமாகஇயலாமல் ஆங்காங்கே தேங்கிப்பாதிப்பைத் தோற்றுவிக்கிறது.மழைநீர் உயிர்நீர் எனும் முத்திரைவாக்கியத்தை மனனம் செய்யமட்டுமே மனித மனம் ஒப்புக்கொள்கிறது. மேலும், மரங்களைசூறையாடிய மனிதச் சமூகம்தொட்டிச் செடிகளைக் கண்டுபரவசமடைந்துநிம்மதியடைகின்றது. அதனாலேயேதம் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதுடன் வாழ்வாதாரங்களைச்சிதைக்கும் பெருமழையை நாகரிகசமூகம் முற்றிலும் நிராகரிக்கும்அவலநிலை இங்குள்ளது.

கனமழையால்பாதிப்படையாதோர் மிகச் சிலரேஆவர். குறிப்பாக, நீர்நிலைகளைஒட்டியும் புறநகர்களில் வீடுகட்டியும்வசிப்போருக்கு மழைக்காலம்பேரிடர் காலமாக ஆகிவிட்டது.மீனவர்களின் துயரப்பாடுகள்சொல்லவொணாதவையாகஇருக்கின்றன.

இத்தகையோரின்பதட்டத்திற்கு திடீரென சூழும்வெள்ளப் பாதிப்புகள் அடிப்படைக்காரணமாக அமைந்திட்டாலும்அதன்பின் எதிர்கொள்ளும்அன்றாட வாழ்க்கைப்பாடு மற்றும்வயிற்றுப்பாடு பிரச்சினைகள் தாம்அவர்களிடையே பூதாகரமாகஇருக்கின்றன. இந்த மனித ஆக்கச்செயற்கைப் பேரிடர்கள் தாம்அப்பாவிப் பொதுமக்களைப்பெரிதாக அச்சுறுத்தி வருகின்றன.பகல் கொள்ளையடிக்கத் துடிக்கும்பெரு, சிறு மற்றும் குறுவியாபாரத்திற்கு கொஞ்சம்கூடநெஞ்சில் ஈரமிருப்பதில்லை.எல்லாம் இரட்டிப்பு விலைதான்.இல்லையேல் அதற்கும் மேலேதான்.

அத்தகையோரிடம் கொஞ்சம்நியாயத்தைக் கோரினாலும்தம்மிடம் அபகரிப்பு செய்யப்பட்டஅநியாயம் தான் பதிலாக நம்மிடம்முன்வைக்கப்படும். வணிகம்எனப்படுவது எத்தகையஅபாயகரமான கொடுங்கோன்மைமிக்கது என்பது நடுத்தெருவில்நமக்குப் புரியவரும். வாழத்தானேவாழ்க்கை! அந்த நப்பாசையில்நாதியின்றித் தவிக்கும்பொதுமக்கள் வயிறெரிந்துமறுபேச்சு பேசாமல் தம்மிடம்இருக்கும் எஞ்சிய பணத்தைப்பறிகொடுத்த வண்ணம் தமக்குரியஅத்தியாவசிய பொருள்களைப்பெற முனைவர்.

மளிகைப் பொருள்கள்,காய்கறிகள், பால் பொருள்கள்முதலான இன்றியமையாதஅனைத்தும் அநியாய விலைக்கேவிற்கப்படும். எந்தப் பொருள்களும்உரிய, உகந்த விலைகளில்கிடைக்காது. அதற்கேமணிக்கணக்கில் கால்கடுக்கப்பரிதவித்தும் பதைபதைத்தும் நிற்கவேண்டி வரும். மனிதாபிமானம்என்பது அந்த ஈரப்பொழுதுகளில்உலர்ந்து காய்ந்துக் காணப்படும்.இத்தகைய மனிதாபிமானமற்றநோக்கும் போக்கும் களையப்படவேண்டும்.

ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்காணப்படுவதைப் போல், நம்நாட்டிலும் இயற்கைப் பேரிடர்காலங்களில் அரசியல்வாதிகள்,அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும்பொதுமக்கள் ஆகியோர்பாதிக்கப்பட்டவர்களுக்குத் தம்மால்இயன்ற அளவிற்கு வழக்கத்திற்குமாறாக உதவிகளைச் செய்யமுன்வருதல் தலையாயத் தேசக்கடமையாகும்.

அரசும் உள்ளாட்சிநிர்வாகங்கள் மூலமாகப் பல்வேறுதற்காலிகக் கூட்டுறவு பண்டகசாலைகளை நிறுவி குறைந்தவிலையில் தரமான பொருள்களைவழங்கிப் பாதிக்கப்பட்ட மக்களின்துயர்துடைக்க போதியநடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்அவசர அவசியமாகும். எரிகிறவீட்டில் பிடுங்குகின்ற வரைஆதாயம் என்று எண்ணித்தீவிரமாகச் செயற்படும்போக்கினைக் கைவிடுதல் என்பதுஇன்றியமையாதது. கடந்தகாலங்களில் நிஷா மற்றும் வார்தாபுயல்களின்போது  நடந்தேறியஎல்லாவிதமானகேலிக்கூத்துகளுக்கும் கிஞ்சித்தும்இடமளிக்காமல் குறுகியஎண்ணங்களைப் புறந்தள்ளவேண்டிய தருணமிது.

அதுபோல், மத்திய மற்றும்மாநில அரசுகள் பாதிக்கப்பட்டபயனாளிகளின் கணக்கெடுப்பை இயன்றவரை சரியாக அளவிட்டுஉரிய நிவாரணத் தொகை மற்றும்பொருள்களை அரசியல்வாதிகளோ,அதிகாரிகளோ, இடைத் தரகர்களோஅவற்றைச் சுரண்டி எஞ்சியவற்றைஏனோதானோவென்று வழங்கிடும்நடைமுறைகள் ஒழிக்கப்படவேண்டும். பயனாளிகளின்பட்டியலையும் விருப்புவெறுப்பின்றி சிறந்த முறையில்தயார் செய்வது இன்றியமையாதது.நிவாரணத் தொகையினைப்பயனாளிகளின் விருப்பத்திற்குஇணங்க அவரவர் வங்கிக்கணக்கில் சேர்ப்பிப்புச்செய்வதையும் வழக்காக்கிக்கொள்ளலாம்.

இத்தகைய மனிதாபிமானமிக்க நிகழ்வுகளில்முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதுகடுமையான நடவடிக்கைகள்மேற்கொள்ளவும் கடும்தண்டனைகள் வழங்கிடவும்ஏதுவாகப் புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவதும் மிகுந்த பலனளிக்கும்.மனிதரை மனிதர் நோகச்செய்வதிலிருந்து விடுபட்டு, சகமனிதனின் கண்ணீரைத் துடைக்கப்பாடுபட்டால் மட்டுமே மானுடம்வெல்லும்!

முனைவர்  மணிகணேசன்,ராஜீவ் காந்தி நகர்

மன்னார்குடி – 614001,திருவாரூர் மாவட்டம்

9442965431                             

mani_ganesan@ymail.com

Related Posts:

0 comments:

Post a Comment