பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தற்போது அரையாண்டு தேர்வு(இரண்டாம்பருவம்) நடந்து வருகிறது. இதன் பின் 3ம் பருவம் துவங்க உள்ளதால் அதற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்திலேயே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை வநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment