
தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் 1,199காலிப்பணியிடங் களை நிரப்ப நடத்தப்பட்டடிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல் நிலைத்தேர்வைசுமார் 6 லட்சம் பட்டதாரிகள்எழுதினர்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுமுடிவுகள் பிப்ரவரி மாதம்வெளியாகிறது.நகராட்சி ஆணையர்(கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவிபிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர்ஆய்வாளர், சிறைத்துறை நன்ன டத்தைஅதிகாரி, இளநிலை வேலைவாய்ப்புஅலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவிஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவுசங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவி யாளர் உள்ளிட்ட பல்வேறுவிதமான பதவிகளில் 1,199 காலியிடங்களைநிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அண்மையில்அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு,முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3நிலைகளை உள்ளடக்கியது.பட்டப் படிப்பைஅடிப்படை கல்வித்தகுதியாக கொண்டகுரூப்-2 தேர்வுக்கு 6 லட்சத்து 26,970 பேரின்விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.அவர்களில்ஆண்கள் 2 லட்சத்து 72,569 பேர். பெண்கள் 3லட்சத்து 54,291 பேர். 10 பேர் மூன்றாவதுபாலினத்தவர். பார்வையற்றவர்கள் 1001பேர். பொதுத்தமிழ் பாடத்தை 4 லட்சத்து 81ஆயிரத்து 80 பேரும்பொது ஆங்கிலம்பாடத்தை 1 லட்சத்து 45,890 பேரும்தேர்வுசெய்தனர்.2,268 மையங்களில்தமிழகம் முழுவதும் 2,268மையங்களில் சுமார் 6 லட்சம்பேர் தேர்வுஎழுதினர். தேர்வுப்பணியில் 31,349 அரசுஊழியர்கள் ஈடுபட்டனர். சென்னையில் 247இடங்களில், 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். ராஜா அண்ணா மலைபுரம்ராணி மெய்யம்மை மகளிர்மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்டஆட்சியர் அ.சண்முகசுந்தரம்ஆய்வுசெய்தார்.தேர்வை முன்னிட்டு மாநகரபோக்குவரத்துக்கழகம் சிறப்புபேருந்துகளை இயக்கியது.
முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வில்தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்ட தேர்வானமுதன்மைத்தேர்வுக்கு தகுதிபெறுவர். ‘ஒருகாலியிடத் துக்கு 10 பேர்’ என்ற விகிதாச்சாரஅடிப்படையில் ஏறத்தாழ 12 ஆயிரம் பேர்முதன்மைத்தேர்வுக்குஅழைக்கப்படுவார்கள். ஒரே கட் ஆப்மதிப்பெண்பெற்றிருந்தால் இந்தஎண்ணிக்கை சற்றுஅதிகரிக்கக்கூடும்.அதில்வெற்றிபெறுவோருக்கு நேர்முக் தேர்வுநடத்தப்படும். இறுதியாக முதன்மைத் தேர்வுமதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம்வெளியிடப்படும்.
முதன்மைத் தேர்வானது மே மாதம்நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஆகஸ்ட் மாதம்வெளியிடப்படும். செப்டம்பரில் சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்பட்டு அக்டோ பரில்நேர்முகத் தேர்வும் அதைத்தொடர்ந்துநவம்பரில் பணி ஒதுக்கீட்டுக்கானகலந்தாய்வும் நடத்தப்படும்
0 comments:
Post a Comment