நினைவில் கொள்ளவும்...தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்ணை எடுக்கும் நபர் கட் ஆப்நிர்ணயம் செய்வதில்லை..நிர்ணயிக்கப்பட்டகாலிப்பணியிடங்களில் கடைசியாக வரும்நபரே நிர்ணயம் செய்கிறார். (1199 x 12 = 14388 or 15000)
1. மொழித் தாளை பொருத்தவரை பொதுதமிழில் 80+ என்பது நல்ல மதிப்பெண்.ஏனெனில் மீதி இருபது கேள்விகளில் பங்குகொண்ட அனைவரும் 20/20 எடுப்பதுசாத்தியம் இல்லை.. எனவே கட் ஆப்மதிப்பெண் எடுக்கும் நபர் 80-85 கேள்விகள்வரை சரியாக பதில் அளிக்க வாய்ப்புஉள்ளது...
2. ஆங்கிலத்தை பொருத்தவரைநுணுக்கமான 25 கேள்விகள்கேட்கபட்டுள்ளதால் தமிழை போலவேஇங்கேயும் 80+ எடுப்பது என்பது நல்லமதிப்பெண்..இங்கே அனைவரும் 90+ எடுக்கவாய்ப்பில்லை... 80+ எடுப்பது சாத்தியம்...
3. பொது அறிவை பொருத்தவரை குருப்நான்கு தரத்தில் கேள்விகள் இருந்தாலும் கட்ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் அந்தகடைசி நபர் நபர் 70+ எடுக்கவாய்ப்பில்லை..ஆனால் 50+ கட்டாயம் எடுக்கவாய்ப்பு உள்ளது...
4. எனவே தோராயமாக 85+60 என்றுஎடுத்துகொன்டாலும் 145 கேள்விகள் மேல்சரியாக பதில் அளித்து இருந்தாலே அடுத்தமெயின் தேர்வுக்கு படிக்க தயார் ஆகலாம்...படிப்பது வீண் போகாது.. குருப் ஒன்றுமெயின் தேர்வுக்கும்
பயன்படும்
5. எல்லோரும் சொல்வது போல 150-160 கட்ஆப் என்றால் 15000 பேர் 150-160 கேள்விகள்சரியாக பதில் அளித்து இருக்க வேண்டும்..இது சாத்தியமா ??? இந்த கேள்விதாளுக்குசாத்தியம் இல்லை...
6. தேர்வு முடிந்த அன்று 160 கேள்விகள்என்று சொல்வதும் கீ வெளியிட்ட பிறகு அதுசடார் என்று 145 க்கு வந்து நிற்பதும்சகஜம்....உண்மையான நிலவரம் கீவெளியிட்ட பிறகே தெரியும்...
7. இந்த தேர்வுக்கு அடுத்த மெயின் தேர்வுவர ஆறு மாதங்கள் இடைவெளி இருப்பதால்தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள்...மெயின் தேர்வு மட்டும் அல்ல குருப் நான்குமற்றும் குருப் இரண்டு போன்றவை வரவும்குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம்....
8. 140 க்கு கீழ் எடுத்தவர்கள் உடனடியாககுருப் 1 தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கலாம்...வேறு வழி இல்லை....
9. காலிப் பணியிடங்கள் ஒரு வேலைஅதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது... எனவேநமக்கு வராது என்று நீங்களே முடிவு செய்துகொண்டு உங்கள் தலை விதியை நீங்களேஎதிர்மறையாக எழுத வேண்டாம்..
10. கட் ஆப் மதிப்பெண் என்பதுகேள்விதாலும்/காலிப் பணியிடங்களும்/போட்டியாளர்களும் சேர்ந்து நிர்ணயம்செய்யப்படுவது.. நாம் ஊகிக்கலாமே தவிரஉறுதியாக சொல்ல முடியாது... எனவே
இது தான் நடக்க வாய்ப்பு இருக்கிறது
170+ = 100 பேர்
165-170 = 1000 பேர்
160-165 = 2000 பேர்
155-160 = 3000 பேர்
150 – 155 = 4000 பேர்
140-150 = 5000 +பேர்
எனவே கிட்டத்தட்ட 140 கேள்விகளுக்கு மேல்விடை அளித்து இருந்தாலே மெயின்தேர்வுக்கு தயாராகலாம்.... ஏனெனில் 2013குருப் இரண்டு மெயின் தேர்வுக்கு 135+எடுதவர்களே மெயின் தேர்வுக்குதேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள்,,,
என் அனுபவத்தின் படி இந்தகேள்வித்தாளில் 140-145 எடுப்பதே பெரியகாரியம்.. எனவே 140 க்கு மேல் இருந்தாலேநேரத்தை வீணடிக்காமல் படிக்கஆரம்பிக்கவும்....
அன்புடன்
வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
Transmission Executive
All India Radio
Tirunelveli
0 comments:
Post a Comment