நடுநிலைப்பள்ளிகளில் தமிழ்
ஆசிரியர்களை நியமிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது,'' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள், காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்
மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதில், முறைகேடுகள் இல்லை, சில குறைபாடுகள் உள்ளன. அது, சரிசெய்யப்பட்டு, எந்த தவறுமின்றி, பணி நியமனம் செய்யப்படும்
தமிழகத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில், புதிதாக தமிழ் ஆசிரியர்களை நியமிக்க, அரசு பரிசீலனை செய்துவருகிறது என்றார்
0 comments:
Post a Comment