பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித்துறையில், இரண்டு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வியின் பணியாளர் பிரிவு இணை இயக்குனர் குப்புசாமி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், ஒருங்கிணைந்த கல்வி திட்ட மான, சமக்ரா சிக் ஷாவின் கூடுதல் திட்ட இயக்குனர் - 2 என்ற பதவி வகிப்பார்.

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., யில் உறுப்பினராக பணியாற்றும் இணை இயக்குனர் உஷாராணி, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர், அதே பதவியில் நீடிப்பார். இதற்கான உத்தரவை, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.

Related Posts:

0 comments:

Post a Comment